ADDED : மே 12, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த குணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 64; விவசாய தொழிலாளி. இவர், கடந்த 5ம் தேதி வெள்ளகேட் பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த பைக் சுந்தரமூர்த்தி மீது மோதி பலத்த காயமடைந்தார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுந்தரமூர்த்தி நேற்று இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.