ADDED : ஜூலை 09, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, : பண்ருட்டி அருகே பைக் மோதி, சைக்கிளில் சென்ற முதியவர் உயிரிழந்தார்.
பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி,75; இவர், நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில், பொன்னங்குப்பத்தில் இருந்து மணம்தவிழ்ந்தபுத்துார் சாலையில் சைக்கிளில் வந்தார்.
அங்குள்ள அங்காளம்மன் கோவில் அருகில் வந்தபோது பின்னால் வந்த பைக் அவர் மீது மோதியது.
பலத்த காயமடைந்த ராமமூர்த்தி, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்தவர் நேற்று இறந்தார்.
புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.