/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேன் கவிழ்ந்து ஒருவர் பலி 35 பேர் காயம்
/
வேன் கவிழ்ந்து ஒருவர் பலி 35 பேர் காயம்
ADDED : பிப் 23, 2025 01:42 AM

விருத்தாசலம்:முதல்வர் ஸ்டாலினை வரவேற்று திரும்பியவர்கள் பயணித்த வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் இறந்தார்; 35 பேர் காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த திருப்பயரில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின், நெய்வேலியில் இருந்து விருத்தாசலம் வழியாக சென்றார்.
முதல்வரை வரவேற்கும் வகையில், விருத்தாசலத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதில் பங்கேற்க, மங்கலம்பேட்டை அடுத்த பழையபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், 'டாடா ஏஸ்' வேனில் விருத்தாசலம் வந்தனர்.
நிகழ்ச்சி முடிந்து விருத்தாசலத்தில் இருந்து கச்சிராயநத்தம் - இருசாளகுப்பம் சாலையில் வந்தபோது, வேன் கவிழ்ந்தது. இதில், டிரைவர் உட்பட 35 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
படுகாயமடைந்த குப்புசாமி, 55, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.