/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேலிருப்பு கோவில் திருவிழா; எதிர் தரப்பினர் கொடியேற்றம்
/
மேலிருப்பு கோவில் திருவிழா; எதிர் தரப்பினர் கொடியேற்றம்
மேலிருப்பு கோவில் திருவிழா; எதிர் தரப்பினர் கொடியேற்றம்
மேலிருப்பு கோவில் திருவிழா; எதிர் தரப்பினர் கொடியேற்றம்
ADDED : செப் 06, 2024 12:34 AM
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தில கோர்ட் உத்தரவுபடி ஒரு தரப்பினர் திருவிழா நடத்திய நிலையில், எதிர் தரப்பினர் நேற்று கொடியேற்றத்துடன், விழாவை துவக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடத்துவத்தில் ஊராட்சி தலைவர் ஹேமமாலினி தரப்பிற்கும், ஒன்றிய கவுன்சிலர் தனபதி தரப்பிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடத்த பண்ருட்டி தாசில்தார் ஆனந்த் தடை விதித்தார்.
அதையடுத்து, ஒன்றிய கவுன்சிலர் தனபதி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவுபடி, போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் விழாவை தனபதி தரப்பினர் துவங்கினர். 30ம் தேதி செடல் உற்சவத்துடன் விழா முடிவுற்றது.
இந்த திருவிழாவில், முன்னாள் ஊராட்சி தலைவர் ேஹமமாலினி தரப்பினர் பங்கேற்காமல், தனியாக திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் நேற்று மாலை கொடியேற்றத்துடன் விழாவை துவக்கினர். வரும் 15ம் தேதி வரையில் 10நாட்களுக்கு அந்த தரப்ினர் விழாவை நடத்துகின்றனர்.
இதனால் பிரச்னை ஏற்படாமல் இருக்க, பண்ருட்டி டி.எஸ்.பி.ராஜா தலைமையில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் பலராமன் உள்ளிட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.