sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் திருப்பணி... ஜரூர்; விரைவில் கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு

/

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் திருப்பணி... ஜரூர்; விரைவில் கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் திருப்பணி... ஜரூர்; விரைவில் கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் திருப்பணி... ஜரூர்; விரைவில் கும்பாபிேஷகம் நடத்த பக்தர்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஜூன் 13, 2024 12:19 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர் பெருவிழா சிறப்பாக நடக்கும்.

அத்துடன் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம், அன்னாபிஷேகம், நால்வர் குருபூஜை, அப்பருக்கு அம்பாள் காட்சியளித்து ரிஷப முத்திரை, சூல முத்திரை வழங்கிய ஐதீக நிகழ்ச்சி, சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி உள்ளிட்டவை வெகு விமர்சையாக நடந்து வருகிறது.

இங்கு, மூலவர் பிரளயகாலேஸ்வரருக்கு 'கை வழங்கீசன்' என்ற பெயரும் உள்ளதால் கை, கால் உபாதையோடு இக்கோவிலுக்கு வந்து வழிபடுவோருக்கு நோய் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

இக்கோவில் கடந்த 2006ல் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நடந்தது. 2018 ஏப்ரல் மாதம் 3ம் தேதியுடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்தது.

கோவிலை புனரமைத்து மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில், அறநிலையத்துறை இணை ஆணையருக்கு விண்ணப்பித்தனர்.

அதன் தொடர்ச்சியாக தொல்லியல் துறை அதிகாரிகள் கோவிலில் உள்ள மூலவர் பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலி அம்மன் சன்னதி, சுற்று பிரகாரத்தில் உள்ள தொல்லியல் துறை சார்ந்த கற்சிலைகள், கல்வெட்டுகள், கற்துாண்களை ஆய்வு செய்தனர்.

ஆனால் கும்பாபிேஷகத்திற்கு பாலாலய பூஜை நடத்தாததால் கோபுரத்தில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து சிலைகள், சுவர்கள் சேதமடைந்து கோபுரங்கள் வலுவிழக்கும் நிலை ஏற்பட்டது.

பக்தர்களின் கோரிக்கையையேற்று, கடந்தாண்டு மே மாதம் பிரளயகாலேஸ்வரர் கோவில் திருப்பணிக்கு கோவில் நிதி ரூ.39.53 லட்சம் மற்றும் உபயதாரர் நிதி ரூ.43.91 லட்சம் என, மொத்தம் ரூ.83.44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, திருப்பணி துவங்கியது.

அமைச்சர் கணேசன், தருமபுர ஆதீனம் திருபுவனம் கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சாமிகள் ஆகியோர் அடிக்கல் நாட்டி, திருப்பணியை துவக்கி வைத்தனர்.

கடந்தாண்டு ஜூலையில் சாரம் அமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரியில் திருப்பணிகள் துவங்கியது.

பணிகள் துவங்கிய நிலையில், அம்மன் சன்னதி, மூலவர், ராஜ கோபுரம், நடராஜர் சன்னதி, சுற்றுச்சுவர்கள் சீரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்துள்ளது.

தரைத்தளம், தொல்லியல் துறை சார்ந்த பணிகள் துவங்கி ஜரூராக நடந்து வருகிறது.

இதனால், பிரளயகாலேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் விரைவில் நடக்கும் என சுற்றியுள்ள கிராம பொது மக்கள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us