sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகளிர் பஸ்சில் கரும்புகை வந்ததால் பயணிகள் ஓட்டம்

/

மகளிர் பஸ்சில் கரும்புகை வந்ததால் பயணிகள் ஓட்டம்

மகளிர் பஸ்சில் கரும்புகை வந்ததால் பயணிகள் ஓட்டம்

மகளிர் பஸ்சில் கரும்புகை வந்ததால் பயணிகள் ஓட்டம்


ADDED : மே 22, 2024 11:23 PM

Google News

ADDED : மே 22, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மகளிருக்கான கட்டணமில்லா அரசு டவுன் பஸ்சில் கரும்புகை வெளியேறியதால், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் இருந்து விருத்தாசலத்திற்கு நேற்று மாலை 3:30 மணியளவில், 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மகளிருக்கான கட்டணமில்லாத அரசு டவுன் பஸ் (பிங்க் நிற பஸ்) புறப்பட்டது. மாலை 4:20 மணியளவில்,

விருத்தாசலம் வயலுார் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது, பஸ்சின் முன்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.

உடனே சுதாரித்த பஸ் டிரைவர், புதுக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பயணிகள் அலறியடித்தபடி பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர்.

தகவலறிந்த விருத்தாசலம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வந்து, பஸ்சை பணிமனைக்கு எடுத்துச் சென்றனர்.

மகளிருக்கான கட்டணமில்லாத பஸ் என்பதால், பழுதான பஸ்சை இயக்குவதா என பெண்கள் புலம்பிச் சென்றனர். ஓடும் பஸ்சில் கரும்புகை வெளியேறிய சம்பவம், அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us