/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கும்பாபிேஷகத்திற்கு அனுமதி யாகசாலை பூஜைகள் துவக்கம் பக்தர்கள் மகிழ்ச்சி
/
கும்பாபிேஷகத்திற்கு அனுமதி யாகசாலை பூஜைகள் துவக்கம் பக்தர்கள் மகிழ்ச்சி
கும்பாபிேஷகத்திற்கு அனுமதி யாகசாலை பூஜைகள் துவக்கம் பக்தர்கள் மகிழ்ச்சி
கும்பாபிேஷகத்திற்கு அனுமதி யாகசாலை பூஜைகள் துவக்கம் பக்தர்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 22, 2024 05:56 AM
நெல்லிக்குப்பம்: கும்பாபிஷேகம் நடத்த ஆர்.டி.ஓ.,அனுமதி வழங்கியதை தொடர்ந்து யாகசாலை பூஜைகள் துவங்கியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் ஊராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதில் ஊராட்சித் தலைவர் நவீன்குமார்,த.வா.க.நிர்வாகி ராஜ் கோஷ்டியினருக்கு இடையே பிரச்னை இருந்தது.
இந்நிலையில் ஊர் மக்கள் இணைந்து திருப்பணிகளை முடித்து 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
நான்கு நாட்களுக்கு முன் ஆர்.டி.ஓ.,அபிநயா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தார்.இதனால் கும்பாபிஷேகம் நடக்குமா என்ற வருத்தத்தில் பக்தர்கள் இருந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆர்.டி.ஓ.,முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கினார். அதை தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜைகள் நடந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று காலை கும்பாபிஷேகம் நடக்கிறது.

