/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இயந்திரம் மூலம் நடவு பணி; பெண்ணாடத்தில் தீவிரம்
/
இயந்திரம் மூலம் நடவு பணி; பெண்ணாடத்தில் தீவிரம்
ADDED : செப் 06, 2024 12:02 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் பகுதியில் சம்பா நெல் பட்டத்திற்கு இயந்திரம் மூலம் ஒற்றை நெல் நாற்று நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பெண்ணாடம் மற்றும் அரியராவி, மாளிகைக்கோட்டம், துறையூர், சவுந்திரசோழபுரம், கிளிமங்கலம், குருக்கத்தஞ்சேரி, கணபதிகுறிச்சி, பெலாந்துறை, கொத்தட்டை, கொசப்பள்ளம், இருளம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் முன்பட்ட சம்பா நடவு பணிக்கு, கடந்த 20 நாட்களுக்கு முன் தட்டு நாற்றங்கால் அமைத்தனர்.
தற்போது நாற்றுகள் செழிப்பாக வளர்ந்த நிலையில், அரியராவி, மாளிகைக்கோட்டம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் இயந்திரம் மூலம் நடவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அரியராவி விவசாயி ஒருவர் கூறுகையில், 'பெண்ணாடம் பகுதியில் நாற்று நடுவதற்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் விவசாயிகள் அதிகளவில் இயந்திரம் மூலம் ஒற்றை நாற்று நடவு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஏக்கருக்கு 15 கிலோ விதை நெல் மட்டுமே தேவைப்படுவதால் செலவும் குறைகிறது. 15 முதல் 20 நாட்கள் ஆன இளம் நாற்றுகளை நடவு செய்வதால் மகசூல் அதிகரிக்கும்' என்றார்.