sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க.,-தே.மு.தி.க.,வினர் 700 பேர் மீது போலீஸ் வழக்கு

/

அ.தி.மு.க.,-தே.மு.தி.க.,வினர் 700 பேர் மீது போலீஸ் வழக்கு

அ.தி.மு.க.,-தே.மு.தி.க.,வினர் 700 பேர் மீது போலீஸ் வழக்கு

அ.தி.மு.க.,-தே.மு.தி.க.,வினர் 700 பேர் மீது போலீஸ் வழக்கு


ADDED : ஜூன் 26, 2024 02:44 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்திற்கு எதிராக கடலுாரில் தடையை மீறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.,வினர் மற்றும் தே.மு.தி.க., வினர் 700 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடலுார் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்தும், தி.மு.க., அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று முன்தினம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, கடலுார் புதுநகர் போலீசார் அனுமதி இல்லாமல் பொது இடத்தில் அரசு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டதாக, மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் சம்பத், சொரத்துார் ராஜேந்திரன், எம்.எல்.ஏ., சத்தியா பன்னீர்செல்வம் உள்ளிட்ட 500 அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தே.மு.தி.க.,:


கடலுாரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து உள்ளிட்ட தே.மு.தி.க.,வினர் 200 பேர் மீது, புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us