பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி, நேற்று காலை 9:30 மணியளவில் மூலவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்; காலை 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர்,மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு விநாயகர்,நந்தி,ஈஸ்வரர்,அம்மன்,பிரதோஷ நாயகர் ஆகிய சுவாமிகளுக்கு நேற்று மாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் ஆலய உட்பிரகார வலம் வந்து அருள்பாலித்தார்.