/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்
/
மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்
மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்
மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூன் 25, 2024 05:04 AM

கடலுார், : கடலுார், வண்டிப்பாளையம் மவுண்ட் லிட்ரா ஸீ சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர்-பட்டம்' இதழ், திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
கடலுார், வண்டிப்பாளையம் மவுண்ட் லிட்ரா ஸீ சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் கவிதா கண்ணன் தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு பட்டம் இதழ் வழங்கினார்.
பள்ளி முதல்வர் அப்துல் சபாகான் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.