/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதுநகர் மகளிர் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வழங்கல்
/
முதுநகர் மகளிர் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வழங்கல்
முதுநகர் மகளிர் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வழங்கல்
முதுநகர் மகளிர் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வழங்கல்
ADDED : ஆக 28, 2024 07:45 AM

கடலுார் : கடலுார் முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர்-பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.அந்த வகையில், கடலுார் ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி உரிமையாளர் விஜயகுமார் தலைமை தாங்கி, முதுநகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கினார்.
தலைமை ஆசிரியை ஜெயந்தி, ஆசிரியர் பாலமுருகன் உடனிருந்தனர்.