/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் துவக்க பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
/
பாடலீஸ்வரர் துவக்க பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
பாடலீஸ்வரர் துவக்க பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
பாடலீஸ்வரர் துவக்க பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 25, 2024 11:41 PM

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் துவக்கப்பள்ளியில், 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர்-பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் துவக்கப்பள்ளியில், மாநகராட்சி 27 வது கவுன்சிலர் சங்கீதா வசந்தராஜ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கினார்.
அப்போது, பள்ளி தலைமை ஆசிரியை கண்மணி, நிர்வாக அலுவலர் குருசந்திரன் மற்றும் ஆசிரியைகள் விஜயலட்சுமி, சத்யபாமா, வள்ளி, பிரேமா, மனோபாலா கலந்து கொண்டனர்.

