/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்
/
கடலுாரில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஆக 23, 2024 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
முகாமில், 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள்நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்கின்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு படித்த இளைஞர்கள் சான்றிதழ்களுடன் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, வேலை வாய்ப்புஅலுவலக பதிவு எண் நீக்கம்செய்யப்படமாட்டாது.
அதனால் மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.