sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர் இறப்பை கண்டித்து போராட்டம்

/

மாணவர் இறப்பை கண்டித்து போராட்டம்

மாணவர் இறப்பை கண்டித்து போராட்டம்

மாணவர் இறப்பை கண்டித்து போராட்டம்


ADDED : மே 24, 2024 03:49 AM

Google News

ADDED : மே 24, 2024 03:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவர் இறந்ததை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் ஹரிஷ்,16: அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 14 ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியானது. அதில், தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை, அவரது பெற்றோர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 9 நாட்களாக, சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆத்திரமடைந்த உறவினர்கள், சரியான சிகிச்சை அளிக்காததால் ஹரிஷ் இறந்ததாக மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார், டாக்டர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us