/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாசகன் ஆலோசனை மையம் கல்லுாரி சேர்க்கை முகாம்
/
வாசகன் ஆலோசனை மையம் கல்லுாரி சேர்க்கை முகாம்
ADDED : மே 07, 2024 11:22 PM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் ஸ்ரீவாசகன் உயர்கல்வி ஆலோசனை மையம் சார்பில் இலவச கல்லுாரி சேர்க்கை முகாம் நடந்தது.
முகாமை, அ.தி.மு.க., மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலர் ரமேஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கினார். நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
துணை இயக்குனர் ரேகா தமிழ்ச்செல்வன், பேராசிரியர்கள் சூர்யபிரகாஷ், ராஜசேகரன், முனைவர் சம்பத்குமார் ஆகியோர் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோருக்கு உயர்கல்வி கல்லுாரி சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினர்.
நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், 'ஸ்ரீவாசகன் உயர்கல்வி ஆலோசனை மையம் மூலம் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு சேர்க்கை பெற்றுத் தருகிறோம்.
கடந்த கல்வியாண்டில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றுத் தந்தோம். அதில், 41 மாணவர்களுக்கு தலைசிறந்த கல்லுாரிகளில் இடம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை மூன்று ஆண்டுகளுக்கு வழங்குகிறோம்' என்றார்.

