sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம்

/

உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம்

உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம்

உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு நிவாரணம்


ADDED : ஆக 04, 2024 11:58 PM

Google News

ADDED : ஆக 04, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: வடலுார் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது ஈட்டி பாய்ந்து உயிரிழந்த மாணவர் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரண தொகை ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

வடலுார் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் மகன் கிஷோர், 15; வடலுார் எஸ்.டி., சியோன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். கடந்த 24ம் தேதி பள்ளி மைதானத்தில் ஈட்டி எறிதல் பயிற்சியின்போது, சக மாணவர் எறிந்த ஈட்டி சிறுவனின் தலையில் பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், 30ம் தேதி உயிரிழந்தார். முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து தமிழக அரசுரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கும் என அறிவித்தார்.

இந்த நிவாரணத் தொகைக்கான காசோலையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று சிறுவனின் தாய் சிவகாமியிடம் வழங்கினார்.

குறிஞ்சிப்பாடி தாசில்தார் அசோகன், வடலுார் நகராட்சி சேர்மன் சிவக்குமார், தி.மு.க., நகர செயலாளர் தமிழ்செல்வன், நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், கவுன்சிலர்கள் மாலதிபிரகாஷ், ராஜபூபதி உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us