/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மன்னார்குடி எக்ஸ்பிரஸ் கடலுாரில் நிற்க கோரிக்கை
/
மன்னார்குடி எக்ஸ்பிரஸ் கடலுாரில் நிற்க கோரிக்கை
ADDED : மே 02, 2024 01:11 AM
கடலுார், : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மன்னார்குடி மஹால் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலுார் மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு;
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மன்னார்குடி மஹால் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
விழுப்புரம்-தாம்பரம் பயணிகள் ரயில் கடலுார் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே போர்டுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மயிலாடுதுறையிலிருந்து கோவை, மைசூர் செல்லும் ரயில்கள் கடலுார் துறைமுகம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

