/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிற் படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு முன்னாள் படைவீரர்களுக்கு அறிவுறுத்தல்
/
தொழிற் படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு முன்னாள் படைவீரர்களுக்கு அறிவுறுத்தல்
தொழிற் படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு முன்னாள் படைவீரர்களுக்கு அறிவுறுத்தல்
தொழிற் படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு முன்னாள் படைவீரர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : மே 17, 2024 11:03 PM
கடலுார் : முன்னாள் படைவீரர்களை சார்ந்தோருக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு இடஒதுக்கீடு பெற, முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சான்று பெற்று விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு, 2024--2025ம் கல்வி ஆண்டிற்கு மருத்துவம்,- பொறியியல்,- டி.பார்ம்,- பி.பார்ம், -பாலிடெக்,- பி.எஸ்.சி (நர்சிங்), -பி.எஸ்.சி(விவசாயம்),- பி.எட்..,- இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி.,- பி.எப்.எஸ்.சி., -ஆசிரியர் பயிற்சி, பட்ட மேற்படிப்புகள் போன்ற பல்வேறு படிப்புகளில் தமிழ்நாடு அரசால் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க, முன்னாள் படைவீரரை சார்ந்தோர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சான்று பெறுதல் வேண்டும். இணையதளம் மூலம் முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகு சான்று அடையாள அட்டை, சார்ந்தோர்களின் பள்ளி இறுதி சான்று, மதிப்பெண் பட்டியல் ஜாதி சான்று, கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், ஓய்வு ஊதியம் ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர், விதவையரின் விண்ணப்பம் ஆகியவற்றுடன், கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக exwelcud@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்று பெற்று பயன்பெறலாம்.
மேலும், கடந்த கல்வியாண்டில் பெற்ற சான்றிதழை இந்த கல்வியாண்டில் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தப்படும் பட்சத்தில் கலந்தாய்வின் போது தங்களின் மகன், மகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும் சார்ந்தோர் சான்று பெறுவதற்கு உரிய சான்று பதிவேற்றம் மற்றும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை, 04142--220732 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உரிய விவரம் பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

