sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் பாலத்தில் தடுப்புச்சுவர் சரி செய்யாததால் விபத்து அபாயம்

/

கடலுார் பாலத்தில் தடுப்புச்சுவர் சரி செய்யாததால் விபத்து அபாயம்

கடலுார் பாலத்தில் தடுப்புச்சுவர் சரி செய்யாததால் விபத்து அபாயம்

கடலுார் பாலத்தில் தடுப்புச்சுவர் சரி செய்யாததால் விபத்து அபாயம்


ADDED : ஏப் 21, 2024 05:49 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அண்ணா மேம்பாலத்தில் லாரி மோதி சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது.

கடலுார் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அண்ணா மேம்பாலம் வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த மாதம் சென்னையில் இருந்து வடலுாருக்கு ஜல்லி ஏற்றி சென்ற டிப்பர் லாரி, இப்பாலம் வழியாக சென்றது.

தரைகாத்த காளியம்மன் கோவில் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதனால், பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்தது. பாலத்தின் முக்கிய பகுதியான இங்கு, விபத்துக்களை தடுக்க, போலீசார், தற்காலிகமாக இரும்பு தடுப்புகளை வைத்தனர். ஆனால், இதுநாள் வரையில், தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பு, தடுப்புச்சுவர் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us