sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலை விரிவாக்க பணிகள் மந்தம் கீரப்பாளையத்தில் தொடரும் பாதிப்பு

/

சாலை விரிவாக்க பணிகள் மந்தம் கீரப்பாளையத்தில் தொடரும் பாதிப்பு

சாலை விரிவாக்க பணிகள் மந்தம் கீரப்பாளையத்தில் தொடரும் பாதிப்பு

சாலை விரிவாக்க பணிகள் மந்தம் கீரப்பாளையத்தில் தொடரும் பாதிப்பு


ADDED : ஜூன் 28, 2024 01:15 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: சிதம்பரம் - கீரப்பாளையம் இடையிலான சாலை விரிவாக்கப்பணி மந்தமாக நடப்பதால், வாகன ஒட்டிகள் அவதி தொடர்கிறது.

சிதம்பரம்-கீரப்பாளையம் வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, அரசு ரூ. 20.80 கோடி நிதி ஒதுக்கியது. கீரப்பாளையத்தில் இருந்து சிதம்பரம் புறவழிச்சாலையில் இணைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணிகள் கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. அதையடுத்து, சாலையோர மரங்கள் ஏலம் விட்டதில் அதிகாரிகள் செய்த முறைகேட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது. அதன் பின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.

அதையடுத்து பணிகள் மீண்டும் துவங்கியது. ஆனால், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பணிகள் தொடர்ந்து நடக்காமல், அடிக்கடி கிடப்பில் போடப்பட்டு வருகிறது. அப்படியே பணிகள் துவங்கினாலும் மந்தமாகவே நடந்து வருகிறது.

தற்போதைய நிலையில், கீரப்பாளையம் தொடக்க வேளாண் அலுவலகத்தில் இருந்து சாலை விரிவாக்க பணிகளுக்கு தோண்டிய சாலையோர பள்ளத்தை சரி செய்யாமல் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சாலை விரிவாக்கப்ப பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us