sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாதம் ரூ.13 கோடி 'லாஸ்' டாஸ்மாக் நிர்வாகம் 'புலம்பல்'

/

மாதம் ரூ.13 கோடி 'லாஸ்' டாஸ்மாக் நிர்வாகம் 'புலம்பல்'

மாதம் ரூ.13 கோடி 'லாஸ்' டாஸ்மாக் நிர்வாகம் 'புலம்பல்'

மாதம் ரூ.13 கோடி 'லாஸ்' டாஸ்மாக் நிர்வாகம் 'புலம்பல்'


ADDED : ஆக 28, 2024 04:58 AM

Google News

ADDED : ஆக 28, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் 146 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இயங்கி வருகிறது. இந்நிலையில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடலுார், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, திட்டக்குடி, பெண்ணாடம் உள்ளிட்ட முக்கிய நகரம் மற்றும் கிராமப்புறங்களில் கள்ளச்சந்தையில் டாஸ்மாக் விற்பனை ஜோராக நடந்து வந்தது.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு அடிக்கடி புகார் சென்றது. அதன்பேரில், தனிப்படை போலீசார் கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுவிற்பனை சரிந்தது. இந்த அதிரடி நடவடிக்கையால், கடலுார் மாவட்டத்தில் மட்டும் அரசுக்கு மாதம் ரூ.13 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் டாஸ்மாக் அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். அதேநேரம் எஸ்.பி.,யின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் கைத்தட்டி பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us