ADDED : செப் 15, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் குட்கா விற்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மங்கலம்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வைசியர் வீதியைச் சேர்ந்த குமார், 43, என்பவர் தனது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, குமாரை கைது செய்தனர்.