நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது சத்தியவாடி வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம், 48, என்பவரை கைது செய்தனர். மாட்டுவண்டியை பறிமுதல் செய்யப்பட்டது.