sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு

/

குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு

குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு

குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு


ADDED : செப் 04, 2024 07:00 AM

Google News

ADDED : செப் 04, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட கடைகோடி நகராட்சி ஒன்றில், குப்பைகளை சேகரிப்பது, காய்கறி கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குப்பைகளை முறையாக தரம் பிரிக்காமல் அனைத்து குப்பைகளையும் ஒன்றாக போடுவதாகவும், சில பிளாஸ்டிக் கழிவுகளை தீயிட்டு எரிப்பதாகவும் அந்நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.

குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு அருகிலுள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் வரையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நகராட்சி உருவாக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக எல்லை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஏற்கனவே உள்ள மக்கள்தொகை, வீடுகள், கடைகள் அடிப்படையில் துாய்மை பணிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு தொகை வழங்கப்படுகிறது. கூடுதல் வழங்காததால், ஒப்பந்ததாரரும், குப்பை விஷயத்தில் அக்கரை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.






      Dinamalar
      Follow us