ADDED : ஆக 27, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது.
தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர், துணைத் தலைவர் முகமது யூனுஸ், மாவட்ட தி.மு.க., பிரதிநிதி சங்கர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக, சையதுன்னிசா சாலிஹ் மரைக்காயர், துணைத் தலைவராக சுரேகா மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மேலாண்மைக் குழு சான்றிதழ் வழங்கப்பட்டது. கூட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.