/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முந்திரி தோட்டங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு
/
முந்திரி தோட்டங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு
ADDED : ஏப் 09, 2024 05:41 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் முந்திரி தோட்டங்களில், மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் கீழ் உள்ள விருத்தாசலம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், ஆண்டிமடம் பகுதிகளில் முந்திரித் தோட்டங்களில் பூப்பது மற்றும் காய்ப்பதில் உள்ள பிரச்னையை கண்டறியும் வகையில், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கரன், இணை பேராசிரியர்கள் (தோட்டக்கலை) சதீஷ், பாஸ்கரன், உதவி பேராசிரியர் (பூச்சியியல்) ராஜபாஸ்கர் ஆகியோர் இரண்டு நாட்கள் கள ஆய்வு நடத்தினர்.
அதில், அனைத்து மரங்களும் பூக்கும் நிலையில் உள்ளன. ஆனால் காய்ப்பிடிப்பு வெகுவாக பாதித்துள்ளது.
அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் பூச்சி மற்றும் நோய் பாதிப்பு இல்லை.
இருப்பினும் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தால் பெண் மற்றும் இருபால் பூச்சிகள் எண்ணிக்கை குறைந்து காய்ப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
இதனை சரிசெய்து போதுமான பாதுகாப்பு பாசனம், தண்ணீர் தெளித்தல் மற்றும் நல்ல மேலாண்மை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கினர். ஆய்வின்போது, வனத்தோட்டக்கழக மண்டல மேலாளர் ராஜேஷ், வன அலுவலர்கள் உடனிருந்தனர்.

