/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கு
/
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : ஏப் 30, 2024 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் 'நவீன மின்னணு வாகன தயாரிப்பு மற்றும் வளர்ச்சி' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
இயந்திரவியல் பொறியியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில், கிருஷ்ணசாமி கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயகுமார், முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு விருந்தினர் புதுச்சேரி லுாகாஸ் டி.வி.எஸ்.பிரைவேட் லிமிடெட் நிறுவன பொறியியல் தலைவர் ஸ்ரீதர் பேசினார். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் சந்திரன், செந்தில்வேல் செய்திருந்தனர்.

