sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரோந்து பணியில் ஈடுபடாத எஸ்.ஐ., ஆயுத படைக்கு மாற்றம்

/

ரோந்து பணியில் ஈடுபடாத எஸ்.ஐ., ஆயுத படைக்கு மாற்றம்

ரோந்து பணியில் ஈடுபடாத எஸ்.ஐ., ஆயுத படைக்கு மாற்றம்

ரோந்து பணியில் ஈடுபடாத எஸ்.ஐ., ஆயுத படைக்கு மாற்றம்


ADDED : பிப் 10, 2025 05:55 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : அண்ணாமலை நகர் சப் இன்ஸ்பெக்டரை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிற்சி சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் அன்பழகன். இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன் சிதம்பரம், அண்ணாமலை நகர் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்ததில் இருந்து பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியமாக இருந்துள்ளார். மேலும், காலையில் நடக்கும் அணிவகுப்பில் பங்கேற்காமலும், இரவு ரோந்து பணியில் ஈடுபடாமலும் இருந்துள்ளார்.

கடந்த வாரம் அண்ணாமலை நகரில், புதுச்சேரி மது பாட்டில் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதியாமலும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், பணத்தை அவரே வைத்துக் கொண்டதாகவும் புகார் எழுந்தது. அதன்பேரில், எஸ்.பி. ஜெயக்குமார் விசாரணை நடத்தி, சப் இன்ஸ்பெக்டர் அன்பழகனை கடலுார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us