ADDED : ஆக 01, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அருகே இரவு காவலர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த வெள்ளையூரை சேர்ந்தவர் செல்லப்பெருமாள், 56. இவர், விஜயமாநகரம் - எம்.பரூர் சாலையில் உள்ள பன்னீர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இரவு காவலராக தங்கி பணிபுரிந்து வந்தார்.
கடந்த 29ம் தேதி இரவு பணிக்கு சென்றவர், மறுநாள் காலை கட்டிலில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து அவரது மகன் சக்கரவர்த்தி கொடுத்த புகாரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.