ADDED : ஏப் 08, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மனநலம் பாதிக்கப்பட்ட பட்டதாரி மகன் காணவில்லை என தந்தை போலீ சில் புகார் செய்துள்ளார்.
கடலுார் அடுத்த தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மகன் முருகானந்தம் 35; எம்.ஏ., பி.எட் பட்டதாரி. இவர் கம்பியம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியில் இருந்தார்.
இவரது மனைவி எழிலரசி, குடும்ப தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்.
இதனால் மனமுடைந்த முருகானந்தம் மனநலம் பாதிக்கப்பட்டார். பள்ளி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் வீட்டில் இருந்த முருகானந்தம் காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

