/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணா விளையாட்டரங்கில் விளையாட்டு போட்டி
/
அண்ணா விளையாட்டரங்கில் விளையாட்டு போட்டி
ADDED : ஆக 22, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குறுவட்ட அளவிலான பள்ளிகள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது. நடுவீரப்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தகுமாரி தலைமை தாங்கினார். விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் துவக்கி வைத்தார்.
போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் கடலூர் குறுவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் சேர்ந்த 1500 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.