/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாடியில் இருந்து விழுந்து மாணவி பலி
/
மாடியில் இருந்து விழுந்து மாணவி பலி
ADDED : ஏப் 13, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அருகே மாடியில் இருந்து கீழே விழுந்த பள்ளி மாணவி இறந்தார்.
கடலுார் அடுத்த நத்தவெளியைச் சேர்ந்தவர் கண்ணன் மகள் வர்ஷினி, 14; கடலுார், திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர், வண்டிப்பாளையத்தில் உள்ள தாத்தா வீட்டில் கடந்த ஒரு வாரமாக தங்கினார்.
நேற்று முன்தினம் மொட்டை மாடியில் காய வைத்திருந்த துணியை எடுக்கச் சென்ற போது, தவறி கீழ் தளத்தில் விழுந்தார். படுகாயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
கடலுார், முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

