ADDED : மார் 04, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் துறைமுகம் கடலில் மூழ்கிய பள்ளி மாணவரை போலீசார் சடலமாக மீட்டனர்.
கடலுார், முதுநகரைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் கிேஷார் (எ) வெங்கடேசன்,15; தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சிங்காரத்தோப்பு கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். சக மாணவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிேஷாரை தேடி வந்தனர்.
நேற்று காலை கிேஷார் உடல் துறைமுகம் உப்பனாற்றில் கரை ஒதுங்கியது.
துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.