ADDED : செப் 15, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த எம்.பரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 24, இவர் கடந்த 10ம் தேதி விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, செந்தில்குமாரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.