ADDED : மே 12, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே கல்லுாரி மாணவியை காணவில்லை என, அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், 50; இவரது மகள் திருஷாலினி, 17; விழுப்புரம் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியில் சென்றவரை காணவில்லை. புதுப்பேட்டை போலீசில் சுந்தர்ராஜ் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.