/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சா விற்க சொல்லி மாணவர்கள் மீது தாக்குதல்
/
கஞ்சா விற்க சொல்லி மாணவர்கள் மீது தாக்குதல்
ADDED : மார் 08, 2025 01:26 AM
சிதம்பரம்:கஞ்சாவை விற்க சொல்லி மாணவர்களை, வியாபாரிகள் தாக்ும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருவதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் கஞ்சா விற்பனை ஜரூராக நடக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், 'கஞ்சாவை ஏன் விற்கவில்லை. கஞ்சா விற்ற பணத்தை ஏன் தரவில்லை?' எனக்கேட்டு, இரு மாணவர்களை, கஞ்சா வியாபாரிகள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவுகிறது.
அதிர்ச்சியடைந்த போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர்களை தாக்குபவர், பிரபல கஞ்சா வியாபாரிகள் ஒடப்பு சிவா, வினோத்குமார் என்பதும், இவர்கள் தாக்கும் மாணவர்கள், சிதம்பரம் அரசு தொழிற்பயிற்சி கூட மாணவர்கள் என்பதும், ஒடப்பு சிவா தற்போது குண்டர் சட்டத்திலும், வினோத்குமார் வேறு ஒரு வழக்கிலும் சிறையில் இருப்பதும் தெரிய வந்தது.
சிதம்பரத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுத்தும் சம்பவம், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.