sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்க சொல்லி மாணவர்கள் மீது தாக்குதல்

/

கஞ்சா விற்க சொல்லி மாணவர்கள் மீது தாக்குதல்

கஞ்சா விற்க சொல்லி மாணவர்கள் மீது தாக்குதல்

கஞ்சா விற்க சொல்லி மாணவர்கள் மீது தாக்குதல்


ADDED : மார் 08, 2025 01:26 AM

Google News

ADDED : மார் 08, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்:கஞ்சாவை விற்க சொல்லி மாணவர்களை, வியாபாரிகள் தாக்ும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருவதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் கஞ்சா விற்பனை ஜரூராக நடக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், 'கஞ்சாவை ஏன் விற்கவில்லை. கஞ்சா விற்ற பணத்தை ஏன் தரவில்லை?' எனக்கேட்டு, இரு மாணவர்களை, கஞ்சா வியாபாரிகள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவுகிறது.

அதிர்ச்சியடைந்த போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர்களை தாக்குபவர், பிரபல கஞ்சா வியாபாரிகள் ஒடப்பு சிவா, வினோத்குமார் என்பதும், இவர்கள் தாக்கும் மாணவர்கள், சிதம்பரம் அரசு தொழிற்பயிற்சி கூட மாணவர்கள் என்பதும், ஒடப்பு சிவா தற்போது குண்டர் சட்டத்திலும், வினோத்குமார் வேறு ஒரு வழக்கிலும் சிறையில் இருப்பதும் தெரிய வந்தது.

சிதம்பரத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுத்தும் சம்பவம், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us