நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி, வேளாண் கல்லுாரி மாணவர்களின் ஊர்வலம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனுார் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்கள், 100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி, பாலக்கரையில் இருந்து பஸ் நிலையம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். அப்போது தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

