sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கர்நாடகாவில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு

/

கர்நாடகாவில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு

கர்நாடகாவில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு

கர்நாடகாவில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு மாணவர்கள் தேர்வு


ADDED : ஜூன் 11, 2024 11:51 PM

Google News

ADDED : ஜூன் 11, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்,: கர்நாடகாவில் நடக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் தேர்வு நடந்தது.

தேசிய யோகாதினம் வரும் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை கர்நாடகா மாநிலம் மைசூரில் நடக்கிறது.

இதில், கடலுார் மாவட்ட அரசு பள்ளியளவில் சிறந்த மாணவ மாணவிகள் தேர்வு விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி கலையரங்கத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர்கள் அருட்செல்வன், விசாலாட்சி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு யோகா போட்டியை துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் முருகானந்தம், செந்தில்குமார் விஜயலட்சுமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்தனர்.

இதில், மாவட்டத்திற்குட்பட்ட 28 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us