sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காதல் தம்பதியை தாக்க முயற்சி கடலுாரில் திடீர் பரபரப்பு

/

காதல் தம்பதியை தாக்க முயற்சி கடலுாரில் திடீர் பரபரப்பு

காதல் தம்பதியை தாக்க முயற்சி கடலுாரில் திடீர் பரபரப்பு

காதல் தம்பதியை தாக்க முயற்சி கடலுாரில் திடீர் பரபரப்பு


ADDED : பிப் 28, 2025 05:51 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் காதல் புதுமண தம்பதியை தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது எம்.பி.ஏ., பட்டதாரி வாலிபரும், புதுச்சேரியை சேர்ந்த 22 வயது எம்.பி.ஏ., பட்டதாரி பெண்ணும், காதலித்து வந்தனர்.

இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவரும் வீட்டை விட்டு வௌியேறி நேற்று முன்தினம் கடலுார், தேவனாம்பட்டினம், சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

புதுமண தம்பதி நேற்று கடலுாரில் உள்ள துணிக்கடைக்கு துணி எடுக்க சென்றனர்.

அங்குவந்த, இருவரின் உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது புதுமணத்தம்பதியை தாக்க முயன்றனர்.

தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் இருதரப்பினரையும ஸ்டேஷனக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இந்நிலையில் இளம்பெண் மாயமானது குறித்து வழக்கு பதிவு செய்திருந்த புதுச்சேரி போலீசார், கடலுார் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனக்கு வந்தனர். விசாரணையின்போது இளம்பெண், காதல் கணவருடன் செல்வதாக கூறினார்.

இதையடுத்து இளம்பெண்ணை கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us