sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு சீல்

/

அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு சீல்

அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு சீல்

அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு சீல்


ADDED : ஆக 06, 2024 07:09 AM

Google News

ADDED : ஆக 06, 2024 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு கலால் தாசில்தார் சீல் வைத்தார்.

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி எதிரே அரசு டாஸ்மாக் கடை (எண்.2470) இயங்கி வருகிறது. கடையின் பின்புறம் உள்ள அறையில் கடந்த ஒரு மாத காலமாக அனுமதியின்றி பார் இயங்கி வந்தது.

தகவலறிந்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் சென்று, அங்கிருந்த 4 மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப், வாட்டர் பாட்டில்கள், சைடீஸ்களை பறிமுதல் செய்தனர்.மேலும் புதுப்பேட்டை சவுந்தரராஜன் மகன் ராஜசேகர், 39, என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, விருத்தாசலம் உட்கோட்ட கலால் தாசில்தார் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் அனுமதியின்றி இயங்கிய பாருக்கு சீல் வைத்தனர். அதிகாரிகள் சீல் வைத்து கொண்டிருந்த போது, மதுபிரியர்கள் சைடீஸ் தேடி, உள்ளே வந்ததால் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us