ADDED : மே 07, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : ரெட்டிச்சாவடி அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் பைக் சாலையோர இரும்பு கட்டையில் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
கடலுார் புதுக்குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் தினகரன், 23; டிப்ளமோ மெக்கானிக்கல் படித்தவர். இவர், நேற்று முன்தினம் இரவு, பஜாஜ் பல்சர் மோட்டார் பைக்கில், புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்தார். ரெட்டிச்சாவடி அருகே வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பு கட்டையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தினகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.