/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு இருவரின் வங்கி கணக்கு முடக்கம்
/
போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு இருவரின் வங்கி கணக்கு முடக்கம்
போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு இருவரின் வங்கி கணக்கு முடக்கம்
போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு இருவரின் வங்கி கணக்கு முடக்கம்
ADDED : ஜூன் 21, 2024 02:20 AM
சிதம்பரம்:சிதம்பரத்தில் பள்ளி, கல்லுாரி, பல்கலைக்கழக பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்துள்ள மீதிகுடி - கோவிலாம்பூண்டி சாலையோரம் கிடந்த கல்லுாரி, பல்கலை., சான்றிதழ்களை சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையில் போலீசார் கைப்பற்றினர். ஆய்வில் அவை அனைத்தும் போலி சான்றிதழ் என தெரிந்தது.
விசாரணையில், சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த நடராஜரத்தின தீட்சிதர் மகன் சங்கர் ,37; மீதிகுடியை சேர்ந்த சுப்பையா மகன் நாகப்பன்,48; ஆகியோர், போலி பல்வேறு கல்லுாரி மற்றும் பல்கலைகள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் பிரபாகர் (பொறுப்பு) கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, சங்கர், நாகப்பனை கைது செய்தனர்.
கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 4 ஆயிரம் போலி சான்றிதழ்களை அவர்கள் விற்பனை செய்திருக்கலாம், அதன் மூலம் ரூ. 4 கோடி வரை பணம் கைமாறி இருக்கலாம் என, கூறப்படுகிறது. அதையடுத்து, இருவரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர்.
கைதான சங்கர், நாகப்பன் இருவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள். நாகப்பன், பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இவ்வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலி சான்றிதழ் விற்பனையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால், இந்த வழக்கின் விசாரணை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.