ADDED : செப் 06, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் கோவில் பின்புறம் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முதியவர் உடலை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருவந்திபுரம் வி.ஏ.ஓ., பரணி, கொடுத்த புகாரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.