/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளத்தில் பாய்ந்தது கார் உயிர் தப்பிய பயணி
/
பள்ளத்தில் பாய்ந்தது கார் உயிர் தப்பிய பயணி
ADDED : மார் 22, 2024 01:29 AM

சேத்தியாத்தோப்பு:புதுக்கோட்டை மாவட்டம், ராஜ மன்னார்குடியை சேர்ந்தவர் இளஞ்சேரலாதன், 53, சென்னையில் வசிக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, 'இனோவா' காரில் ராஜ மன்னார்குடிக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டினார்.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு குமாரக்குடி வளைவு பாலத்தை கடந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரிக்கு வழிவிட ஒதுங்கினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில்  உள்ள 20 அடி ஆழ வாய்க்காலில் பாய்ந்தது.
காரை ஓட்டி வந்த இளஞ்சேரலாதன் லேசான அடியுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அவரை, நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

