/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு புகுந்து பணம் திருடியவர் கைது
/
வீடு புகுந்து பணம் திருடியவர் கைது
ADDED : மே 30, 2024 05:58 AM

காட்டுமன்னார்கோவில்: குமராட்சி அருகே வீடு புகுந்து பணம் மற்றும் மொபைல் போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
குமராட்சி அருகே கீழவன்னியூர் மெயின்ரோட்டில் வசித்து வருபவர் கதிர்வேல் மனைவி அஞ்சம்மாள், 40; கணவர் இறந்த நிலையில், தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 21ம் தேதி இரவு வீட்டில் துாங்கியபோது, உள்ளே புகுந்த மர்ம நபர், மொபைல் போன் மற்றும் பீரோவில் வைத்திருந்த 10 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு தப்பினார்.
இது குறித்த புகாரின்பேரில் குமராட்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், வீரநத்தம் பைபாஸ் சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்ததில், வடக்கு கொளக்குடியை சேர்ந்த முகமது அன்சாரி மகன் தாஜூதீன்,31 என்பதும், அஞ்சம்மாள் வீட்டில் திருடிய நபர் என்பதும் தெரியவந்தது. அதைடுத்து, தாஜூதீனை போலீசார் கைது செய்தனர்.