ADDED : ஏப் 28, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு :   நடுவீரப்பட்டு அருகே குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து கொலைமிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த எஸ்.புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்,55; இவருடன் வடக்கு அப்பியம்பேட்டையை சேர்ந்த மோகன், 45; பாலகுமார் ஆகியோர் எஸ்.புதுக்குப்பம் பால்வாடி அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மோகன் ராதாகிருஷ்ணனிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார்.
ஆத்திரமடைந்த மோகன், ராதாகிருஷ்ணனை ஆபாசமாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். படு காயமடைந்த ராதாகிருஷ்ணன் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து மோகனை கைது செய்தனர்.

