sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவரை ஆசிரியர் திட்டியதால் விருதை பள்ளியில் பரபரப்பு

/

மாணவரை ஆசிரியர் திட்டியதால் விருதை பள்ளியில் பரபரப்பு

மாணவரை ஆசிரியர் திட்டியதால் விருதை பள்ளியில் பரபரப்பு

மாணவரை ஆசிரியர் திட்டியதால் விருதை பள்ளியில் பரபரப்பு

1


ADDED : ஜூலை 11, 2024 05:46 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 05:46 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவரின் உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று காலை 9:30 மணியளவில், பிளஸ் 1 மாணவர் ஒருவரின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி வளாகத்துக்குள் திரண்டு வந்து, மாணவரை திட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் பிரேம்குமாரிடம் முறையிட்டனர்.

தகவலறிந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர். அதில், நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதால், கலைந்து போகுமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். அப்போது, அவர் மாணவரை திட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாணவர்களின் உறவினர்களை சமாதானப்படுத்தி, இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்தார்.

இச்சம்பவத்தால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us