ADDED : செப் 18, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : வடக்குவெள்ளுரில்நடந்துசென்றவரிடம் பணம் வழிப்பறி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் அடுத்த கைக்கானக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கரியன்.
இவர் நேற்று முன்தினம் மாலை வடக்குவெள்ளுர் சாலையில நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நெய்வேலி வட்டம் 30 பகுதியை சேர்ந்த சுதாகர், 22; என்பவர், கரியனை வழிமறித்து அவரிடமிருந்து 500 ரூபாயை வழிப்பறி செய்தார்.
இது குறித்து கரியன் கொடுத்த புகாரில், மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து சுதாகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.