ADDED : மே 07, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : முன்விரோத தகராறில் வாலிபரை பிளேடால் கிழித்து, மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி மகன் தமிழரசன், 32, கனகசபை மகன் மணிமாறன், 23. இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 5ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிமாறன் மறைத்து வைத்திருந்த பிளேடால், தமிழரசனை கை, முதுகு பகுதிகளில் கிழித்து மிரட்டல் விடுத்தார்.
படுகாயமடைந்த தமிழரசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப் பதிந்து, மணிமாறனை கைது செய்தார்.

